• Sep 20 2024

நாளுக்கு நாள் சம்பளத்தை உயர்த்தும் ராஷ்மிகா... இப்போ எத்தனை கோடி கேட்கிறாங்க தெரியுமா... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகில் பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாகவே திரையுலகில் அறிமுகமானார்.


இதன் பின்னர் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த 'கீதா கோவிந்தம்' என்ற திரைப்படமானது இவரை இந்திய அளவில் புகழ்பெற்று பெருமளவில் பிரபலமடைய வைத்தது. 

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பலமொழி படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் நடித்த திரைப்படம் புஷ்பா. இதிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது விஜய் நடித்து வரும் 'வாரிசு' என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இந்த திரைப்படத்தின் வாயிலாக ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் மிகப் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

இவ்வாறாக பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து புகழின் உச்சத்தில் மிதக்கும் ராஷ்மிகா மந்தனா நாளுக்கு நாள் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்திய வருகின்றார். 

அந்தவகையில் தென்னிந்தியாவில் நடித்த படங்களில் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த ராஷ்மிகா, பாலிவுட்டில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன.


அதனைத் தொடர்ந்து தற்போது மறுபடியும் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார். அதாவது இனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 5 கோடி சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளாராம் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் காரணமாக தென்னிந்திய தயாரிப்பாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement