தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில் தற்போது 10 வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது விக்ரமன், ஜனனி, அசீம், அமுதவாணன், ரச்சிதா, ஏடிகே, மணிகண்டன், மைனா ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இருப்பினும் இன்றைய தினம் ஜனனி வெளியேறுவார் எனப் பலராலும் கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் போட்டியாளர்களிடம் பாரதியார் பாட்டுப் பற்றிக் கேட்கின்றார். அந்தவகையில் மைனா எழுந்து "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாடலைப் பாடிக் காட்டுகின்றார். ஆனால் அவர் அதில் ஒரு சில வரிகளைப் பிழையாகப் பாடுகின்றார்.
அதாவது காலை எழுந்தவுடன் படிப்பு என்பதற்குப் பதிலாக காலை எழுந்தவுடன் பாட்டு எனப் பாடுகின்றார். அதற்கு உடனே கமல் "என்ன மைனா என்ன மாதிரியே இருக்கீங்களே" எனக் கூறி சிரிக்கின்றார்.
Listen News!