பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனானது 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இறுதியாக தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, ஷிவின், கதிர், மணிகண்டன் என ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் கமல் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்துப் பேசுகின்றார். அந்தவகையில் ஷிவினிடம் "என்னிடம் ஏதாவது கேட்க நினைத்தால் கேளுங்க" எனக் கூறுகின்றார். அதற்கு ஷிவின் நான் ரொம்ப கத்திப் பேசுகின்றேனா எனக் கேட்கின்றார். அதற்கு கமலும் ஆமா என்கின்றார்.
அடுத்து விக்ரமன் "என்னுடைய இயல்பில் தான் நான் இருக்கேன், அம்மா வந்திட்டுப் போனப்போ ஜாலியாக இருக்கப் பாரு என்று சொன்னாங்க" என்றார். அதற்கு கமல் சிரிச்சு கூட்டத்தோடு கூட்டமாய் கலக்கிறது ரொம்ப முக்கியம் என்கிறார்.
அதேபோல் கதிரவன் சண்டை வரக் கூடாது என்று யோசிக்கிற ஒரு ஆள் நான் என்கின்றார். அதற்கு உடனே கமல் எல்லாருக்கும் விருப்பமே அது தான், ஆனால் நடந்திட்டு இருக்கே, இருக்கிற இடத்தை எல்லாருமே தக்க வைச்சுக்கணுமே என்கின்றார்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!