தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில், தற்போது இதன் 6ஆவது சீசனானது 100 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் யார் டைட்டிலை வெல்லப்போகின்றார் என்பதை அறிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்த நாட்கள், செஞ்ச டாஸ்க் என்று... அவை குறித்த நினைவுகளாக அதன் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் ஷிவினைப் பார்த்து பிக்பாஸ் "உங்களால இந்த வீட்டிற்கும், இந்த நிகழ்ச்சிக்கும், என் இந்த முழு சமூகத்திற்குமே பெருமை. நீங்க இனிமேல் எங்கும் ஒழியத் தேவையில்லை, உங்களை வரவேற்க வெளியில் ஏராளம் தாய்மார்கள் உள்ளனர்" எனக் கூறுகின்றார். அதற்கு உடனே ஷிவின் கை எடுத்துக் கும்பிட்டு கதறி அழுது "எல்லாருக்குமே நன்றி, நான் வந்த வேலை முடிஞ்சிடிச்சு என்று நினைக்கிறேன்" எனக் கூறுகின்றார்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!