விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது.
அபியை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய வெற்றி தற்பொழுது சுடர் தன்னுடைய பிள்ளையா அல்லது அபி எடுத்து வளர்க்கும் பிள்ளையா என்பதை அறிய முயற்சி செய்து வருகின்றார். அந்தவகையில் முதற்கட்ட முயற்சியாக ராஜஸ்தான் செல்கின்றார் வெற்றி.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெற்றியை போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர். கண்மணியிடம் சென்று வெற்றி இங்க வந்தானா..? எனக் கேட்கின்றனர். அதற்கு கண்மணி இங்க வரல எனக் கூறுகின்றார். பின்னர் போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து தீவிரமாக தேடி விட்டு செல்கின்றனர்.
பின்னர் அபிக்கு கால் பண்ணி "நாங்க அரெஸ்ட் பண்ண வாறது தெரிந்து வெற்றி எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்கின்றனர். மறுபுறம் அபிக்கு கால் பண்ணிய கண்மணி "வெற்றி ராஜஸ்தான் போய் இருப்பதாகவும், அவன் குழந்தை யார் எனக் கண்டுபிடிக்கத் தான் வெற்றி போவதாகவும்" கண்மணி அபியிடம் உண்மையைக் கூறுகின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!