• Sep 20 2024

சிவாஜி குடும்பத்தில் வெடித்த சொத்து பிரச்சனை…அபகரித்தாரா பிரபு; நீதிமன்றம் சென்றது யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். மேலும் ‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள விடயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்றில் இருந்து அந்த பெயரே நிலைத்தது.

மேலும் இவருக்கு பிரபு,ராம்குமார் என இரு மகன்களும் சாந்தி,ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.பிரபு, ராம்குமார் இருவருமே படங்களில் நடித்துள்ளனர் அது அனைவருக்கும் தெரிந்த விடயம். பிரபு தற்போது வரை பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராம்குமார், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சிவாஜி, பிரபுவை தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக நடிகர் விக்ரம் பிரபுவும் தற்போது பிரபல ஹீரோவாக பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார்.

கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளனர்.அத்தோடு , தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாகவும், சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.சிவாஜி குடும்பத்தில் இப்படி ஒரு சொத்து பிரச்சனை நடந்து, அது கோர்ட் வரை சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சகோதரிகள் தொடர்ந்த வழக்கை சிவாஜி குடும்பத்தினர் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள். மேலும் இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள கோலிவுட்டே பதற்றத்துடன் காத்திருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement