• Sep 21 2024

ரோஜா சீரிலில் இருந்து விலகிய கதாநாயகன்-அவரே வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா.

தொடர்ந்து பல வாரங்களாக பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலிலும் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்து விடும்.

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வர, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்று வந்த வேளையில் ரசிகர்களுக்கு ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால் இதில் கதாநாயகனாக நடித்த சிப்பு சூர்யன் தான் விலகப்போவதாக தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் வேண்டாம் நீங்கள் போக வேண்டாம் என்றும் என் மகனுக்கு 4 வயது மற்றும் எனது மகளுக்கு 2 1/2 வயது.. அவர்கள் இருவரும் உங்கள் தீவிர ரசிகைகள்…. அவர்கள் தினமும் உங்களைப் பார்க்கிறார்கள்… குறைந்த பட்சம் அவர்களுக்காக ஒரு சிறிய வீடியோவையாவது உருவாக்குங்கள். அவர்கள் உங்களை மிகவும் மிஸ் செய்வார்கள்… நீங்கள் வெளியேறிய பிறகு அர்ஜுன் ஏன் வரவில்லை என்று அவர்கள் எங்களிடம் கேட்பார்கள் என பலவித உருக்கமான பதிவுகளை இட்டுள்ளார்கள்.

இதோ அந்த அறிக்கை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement