தென்னிந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு நடிகை என்றால் அது த்ரிஷா தான். இவர் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருகின்றார். இருப்பினும் இவருக்கு தற்போது ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைந்து விட்டன.
அந்தவகையில் '96' படத்தின் வெற்றிக்கு பின்னர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காமையினால் தவித்து வந்த த்ரிஷா தற்போது 'பொன்னியின் செல்வன்' மூலம் மறுபடியும் கம்பேக் கொடுத்திருக்கின்றார். அதாவது மணிரத்னத்தின் கனவுப்படமான இப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.
மேலும் இப்படமானது வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்ற நிலையில் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இதில் பல பிரபலங்களும் கலந்து சிறப்பித்த வண்ணமே உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இடப்பெற்ற நேர்காணல் ஒன்றில் த்ரிஷாவிடம், அவர் 'தளபதி 67' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியை கேட்டு சிரித்த நடிகை த்ரிஷா "இது பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி என்பதால், அது சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பேன்" என உறுதியாக கூறிவிட்டார்.
இருப்பினும் த்ரிஷா 'தளபதி 67' படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் மழுப்பியதனால் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே பலரும் நம்பியுள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இப்படத்தில் விஜய் மும்பையை சேர்ந்த தாதா கேரக்டரில் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதுமட்டுமல்லாது இப்படத்தில் நடிக்க இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டத்தோடு அதில் ஒன்று சமந்தா மற்றொன்று த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே த்ரிஷா நடிக்கிறாங்களா இல்லையா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!