தமிழ் சினிமாவின் பிரபல பாடகராக இருந்தாலும் இளையராஜா செய்யும் பல விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவது வழமை. அந்தவகையில் அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும், அதற்கு பிறகு அவருக்கு எம்பி பதவி தரப்பட்டதும் சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது யாவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இளையராஜா எம்பி பதவியை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இசைஞானி ஆரம்பத்தில் இருந்தே பலருடன் பல பிரச்சனைகளையும் செய்து வந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் வரிகளை சரி செய்து வைரமுத்துவை அசிங்கப்படுத்தி தூக்கி எறிந்தவர். இதனால் கோபமடைந்து ஒருகட்டத்தில் இளையராஜாவை நெருங்குவதை கூட விட்டுவிட்டார் வைரமுத்து.
இதேபோல் தான் ரோஜா படத்தின் மூலம் இசையை ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் நாட்டுபுறம், கர்நாடக இசை என்று இளையராஜா பட்டறையில் இசைப் பயிற்சிகளைப் பயின்று வந்துள்ளார். அப்படி 'ரோஜா' படத்திற்கு பிறகு எஸ்பிபி, மனோ, சித்ரா, ஜானகி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மட்டும் ரகுமான் தன்னுடன் பணி புரிய வாய்ப்பு கொடுத்தாரே தவிர வேறு யாருக்கும் அப்போது தரவில்லை.
இது இப்படி இருக்கையில் ரகுமான் இளையாராஜாவின் இசைக்குழுவில் பியானோ வாசிப்பாளராக பணியாற்றும் போது 500 பாடகளுக்கு மேல் பிரமாண்டமான முறையில் இசையமைத்திருக்கிறாராம். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டின் இசைக்கருவியை வரவழைத்து தன் இசையை மேல் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார் ரகுமான்.
ஆனால் ரகுமானின் வெற்றியை இளையராஜா 1 வருடம் கிடைக்காத படி தன்னுடைய இசையை மட்டுமே அந்த காலக்கட்டத்தில் மேலோங்க செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாது அவர் மேல் பொறாமை கொண்ட இளையாராஜா ரகுமானின் இசையை இதுவரையில் கேட்டதும் இல்லையாம்.
இவ்வாறாக தலைக்கணத்தில் தன் இசையை விட யாரும் சிறப்பாக அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று மற்ற இசையமைப்பாளர்களை இன்றுவரை குறை கூறியும் வருகிறார் இசைஞானி இளையராஜா. இதனால் இவரை இன்றும் பலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!