சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் அப்பத்தா எங்கே என மற்றவர்கள் கேட்க, அதற்கு ஜனனி ஜீவானந்தத்தோட தான் இருப்பாங்க போல என்கிறார். பின்னர் நந்தினி ஜீவானந்தத்தின் மகளை பற்றி ஜனனியிடம் விசாரித்து விட்டு, பாவிங்க அழகா இருந்த அந்த குடும்பத்தை இப்படி கலைச்சுட்டானுங்க. அந்த பொண்ணுக்கும் நம்ம தாரா வயசு தானே இருக்கும். அம்மா இல்லாம அந்த குழந்தை என்ன பாடுபடும்" எனக் கூறி மிகவும் வருந்துகின்றார்.
அதற்கு ஜனனி "அக்கா, ஜீவானந்தம் அல்லது அவர் பொண்ணு மேல நீங்க பரிதாபம் காட்ற மாதிரி நடந்துக்காதீங்க. அதை அவர் கொஞ்சமும் விரும்பமாட்டார். நாம போற காரியமும் நடக்காம போகவும் வாய்ப்பு உண்டு" என நந்தினிக்கு அட்வைஸ் பண்ணுகின்றார்.
இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி மட்டும் அமைதியாக உட்கார்ந்து ஜீவானந்தம் பற்றியே நினைத்து வேதனைப்பட்டு கொண்டு இருக்கிறார். உடனே ரேணுகா "ஏன் அக்கா ஒரு மாதிரி இருக்கீங்க? எதையோ யோசித்து கொண்டே இருக்கீங்களே ஏன்? என்கிறார். பதிலுக்கு ஈஸ்வரி 10 நாட்களுக்கு முன்னர் ஜீவானந்தத்தை மீண்டும் சந்திப்பேன் என நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. அதற்குள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது எனக்கூறிப் புலம்புகின்றார்.
பின்னர் ஈஸ்வரி கல்லூரிக் காலத்தில் ஜீவானந்தத்துடன் நடந்த அழகிய உணர்வுகளை பகிர்கிறார். அதுமட்டுமல்லாது, எனது இந்த 18 வருட திருமண வாழ்க்கை ஒரு தோல்வி தான் ஆனால் அதனால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தோற்றுவிட்டது என்ற அர்த்தம் இல்லை. இத்தனை காலத்தில் நம்முடைய மனசுக்கு சந்தோஷம் தந்த நொடிகள் சில இருக்கும். அவற்றை நாம் நம் மனதுக்குள் சென்று தேடி பார்த்து திறந்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும் எனவும் உணர்ச்சி பூர்வமாக கூறுகின்றார்.
மறுபுறம் குணசேகரன் வீட்டுக்கு வந்த ஒருவர் குணசேகரனை கிளப்பின் சேர்மேன் எலெக்ஷனில் நிற்குமாறு கூறுகின்றார். அப்போது கிள்ளிவளவனும் வருகின்றார். கிள்ளி வளவனைப் பார்த்துக் கடுப்பான கதிர் "எதுக்குயா இங்க வந்த?" எனக் கேட்கின்றார்.
பதிலுக்கு கிள்ளி வளவன் "உங்களுக்கு ஓரு வேலை ஆகணும்னா என்ன தேடி வருவீங்க. வேலை முடிந்ததும் அப்படியே கட் பண்ணிட்டு நவுந்துறீங்க?" என்கிறார். அத்தோடு "போன் பண்ணாலும் இந்த பய கட் பண்ணிவிடுறான். இல்லாட்டி எடுத்தாலும் பேசாம இருக்கான்" என கிள்ளி வளவன் கூறுகின்றார். பதிலுக்கு கதிர், எனக்கு எந்த போனும் வரல நான் அதை கட் பண்ணவும் இல்லை எனக் கத்துகின்றார்.
இதைப் பார்த்த குணசேகரன் கிள்ளி வளவனிடம் "உங்க பேமெண்ட் தானே சார் அதெல்லாம் கரெக்டா வந்துடும்" என்கிறார். அதற்கு கிள்ளி வளவன் "அதெல்லாம் எப்படி வாங்குறது என எனக்கு தெரியும். நான் அதுக்காக வரவில்லை. அந்த ஜீவானந்தம் பய இந்த ஏரியாவுல தான் சுத்திகிட்டு இருக்கான் என எனக்கு தகவல் வந்தது. அவனை ஏன் விட்டு வைக்கணும். அது தான் சொல்லலாம் என வந்தேன்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.
Listen News!