தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'தாதா'. இப்படத்தில் இவருடன் இணைந்து நிதின் சத்யாவும் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு கின்ன்ஸ் கிஷோர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் என்பன எழுதி இயக்கி உள்ளார். வித்தியாசமான கதையம்சம் நிறைந்ததாக உருவாகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அத்தோடு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் யோகிபாபுவின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் தான் 4 சீனில் தான் நடித்ததாகவும், தயவு செய்து தன்னை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் கூறி டிவிட்டர் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார் யோகிபாபு.
யோகிபாபுவின் இந்த செயலால் கடுப்பான தாதா திரைப்படத்தின் இயக்குநர் கிஷோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அங்கு பேசுகையிலே அவர் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார்.
அந்த சமயத்தில் அவர் கூறிய ஒரு விடயமானது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. அதாவது "யோகி பாபு தாதா படத்தில் நடித்திருக்கிறார். டப்பிங் பேச வராததால் எங்களுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நான் அவரை அடித்ததால் பயந்து போய் இந்த படத்துக்கு வந்து டப்பிங் பேசி கொடுத்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் இந்த மாதிரி பொய்களை யோகி பாபு கூறிவருகிறார்" எனத் தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு "துரைராஜன் என்பவர் என்னுடைய படத்தில் எடிட்டராக வேலை செய்தவர். அவர் நான் எடுத்த படத்தை எடிட்டிங் செய்து வைத்து இப்படி எல்லாம் பொய் புகார் அளித்திருக்கிறார்" எனவும் தாதா படத்தின் இயக்குநர் கிஷோர் கூறினார். இவ்வாறாக இயக்குநர் யோகிபாபுவை அடித்ததாக கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!