தமிழ் சின்னத்திரை எடுத்துக் கொண்டால் நன்கு பிரபலமாக ஓடுவது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி தான். இந்த தொலைக்காட்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
TRPயிலும் டாப்பில் 10ல் வருவது இந்த 2 தொலைக்காட்சி சீரியல்கள் மட்டுமே. தற்போது விஜய் டிவி சீரியல்கள் குறித்து தான் நிறைய செய்திகள் வருகின்றன. இப்போது புதிய சீரியல்களின் ப்ரமோ வர வர பழைய சீரியல்கள் முடிவுக்கு வருகிறது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் ஆரம்பிப்பதாலும் நிறைய சீரியல்களை முடித்து வருகிறார்கள். அப்படி நமக்கு கிடைத்த தகவல்படி பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து போன்ற தொடர்கள் முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.
எனினும் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாசன் கணேசன் சீரியல் நாயகி நேஹா ராமகிருஷ்ணன் கலந்துகொண்டுள்ளார். மேலும் அவரது இன்ஸ்டாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பதிவுகளும் உள்ளன.
அதேபோல் பாவம் கணேசன் தொடர் குழுவினருடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார், எனவே தொடர் முடிவுக்கு வந்தது என தெரிகிறது.
Listen News!