• Sep 21 2024

குணசேகரனின் நண்பராக என்ட்ரி கொடுக்கும்'கோலங்கள்' சீரியல் பிரபலம்! வசமாக சிக்கும் ஆதிரை வெளியான 'எதிர்நீச்சல்'அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

'எதிர்நீச்சல்' சீரியல் தற்போது எதிர்பார்க்காத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும், ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு பக்கம் ஜனனியும், மற்றொரு பக்கம் குணசேகரனும், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பரபரப்பாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டும் காட்சிகள் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக அப்பத்தாவின் சொத்தை ஆக்கிரமித்த ஜீவானந்தம் மீது குணசேகரன் கொலை வெறியில் உள்ளார்.

ஜனனி ஓரளவு போலீசாரிடம் இருந்து ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொண்டாலும், இதுவரை பட்டமாவுக்கும் - ஜீவானந்தத்திற்கும் இடையே என்ன உறவு என்பது மர்மமாகவே உள்ளது. எனவே அடுத்தடுத்த வாரங்களில் இந்த சீரியலில் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள புரோமோவில், கடந்த சில நாட்களாக சீரியலில் முகம் காட்டாமல் இருந்த ஜான்சி ராணி... அதிரடியாக என்ட்ரி கொடுக்கிறார்.  ஃபர்ஸ்ட் நைட் ஃபஸ்ட் நைட் என கூறிக் கொண்டிருக்கும் கரிகாலன், ஆதிரையை எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க நான் அங்க போயி ஃபர்ஸ்ட் நைட் வைத்துக் கொள்கிறேன் என வழக்கம்போல் எடக்கு மடக்காக பேச, ஜான்சி ராணி எல்லாமே முடிஞ்சிடுச்சுனு சொன்னியே என மகனிடம் கேட்கிறார். அப்படிதான் ஆதிரை சொல்ல சொன்னுச்சு என அவரையே வசமாக சிக்க வைக்கிறார்.

.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான 'கோலங்கள்' சீரியலில் நடித்த தில்லை நாயகம் குணசேகரின் நண்பனாக என்ட்ரி கொடுத்துள்ளார். அவரிடம் குணசேகரன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, என்ன ஒரு கை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என, தில்லைநாயகம் கேட்க அதற்கு அரிசி மூட்டை எடுத்து போடும் போது கை சுலுகிடுச்சு, என்ன பண்றது எல்லா வேலையும் நாம தான பாக்க வேண்டி இருக்கு என ரொம்ப சாதாரணமாக பொய் சொல்கிறார்.  

எனினும் ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்ள தற்போது  தில்லை நாயகத்திடம் சரணடைந்துள்ள குணசேகரனுக்கு உண்மையில் ஜீவானந்தத்தின் பற்றிய தகவல்கள் கிடைக்குமா? அதன் பிறகு அவருடைய மூவ் எப்படி இருக்கும்? என்பதை அனைவ்ரும் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement