தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...
தீவிரவாதிகள் போலீஸிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாரதிக்கு என்ன ஆச்சு அமைச்சர் எப்படி இருக்கிறார் என விசாரிக்கிறேன் அமைச்சருக்கு நாளைக்கு ஆப்ரேஷன் என்று சொல்கின்றனர். பாரதி மட்டுமே தனியாக ஆபரேஷன் செய்ய போவதாக சொல்ல போலீஸ் இன்னொரு மருத்துவரை உள்ளே அனுப்புவதாக கூறுகின்றனர்.
ஆனால் தீவிரவாதிகள் நீங்க அனுப்புங்க ஆபீஸர் டாக்டர் என நினைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி இருந்தாலும் பாரதி மட்டுமே தான் ஆபரேஷன் செய்திருக்க வேண்டும். அதனால் அதற்கு மீண்டும் அனுமதி இல்லை என மறுத்து விடுகின்றனர்.
மேலும் இந்தப் பக்கம் லட்சுமி பாரதிக்கு என்ன ஆச்சு என அழுது கொண்டிருக்க அப்போது பாரதியை தீவிரவாதிகள் அழைத்து வர உடனே ஓடிப் போய் லட்சுமி அப்பா என கட்டிப்பிடித்து அழுகிறாள். அகிலன், அஞ்சலி, டாக்டர்கள், நர்ஸ் என எல்லோரும் பாரதியை பற்றி விசாரிக்கின்றனர்.
இதனையடுத்து இந்த பக்கம் சௌந்தர்யா பாரதிக்கு என்னாச்சு என தெரியாமல் அழுத புலம்ப பிறகு பாரதியை டிவியில் பார்த்ததும் சந்தோஷப்படுகின்றனர். அத்தோடு சௌந்தர்யா சாப்பிட மறுத்து அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் நிறைவுபெறுகின்றது.
Listen News!