• Sep 20 2024

கதிரால் குணசேகரனிடம் மீண்டும் அசிங்கப்பட்ட நந்தினி... அப்பத்தாவை பார்க்கப் போன ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி... சூடுபிடிக்கும் 'Ethirneechal' Episode..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.


அந்தவகையில் நந்தினி குணசேகரன் தன்னை அடிக்க கை ஓங்கியதை பற்றியும், கேவலமாக திட்டியது பற்றியும் சொன்னதும் கதிர் கோபப்பட்டு குணசேகரனிடம் சென்று "அவளை என்ன சொன்னீங்க, அடிக்க போனீங்களா, அவள் பேசுறத கேட்டு கழுத்தை நெருச்சி அவளை கொன்னுருக்க வேண்டாம். பேசவிட்டு வேடிக்கை பாத்தீங்களா" என அண்ணனுக்கு சப்போர்ட் ஆக பேசியதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பதிலுக்கு குணசேகரன் நந்தினியை பார்த்து "அவன் என்னோட தம்பி. அவனை நீ என்ன செய்தாலும் மாற்ற முடியாது. போய் வேலையை பாரு" என கூறுகின்றார். இதையடுத்து நந்தினி குணசேகரன் முன்னாள் அசிங்கப்பட்டு கலங்கி  நிற்கிறாள். அவளுக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.


மறுபுறம் கதிர் குணசேகரனிடம் கிள்ளிவளவனை திட்டி தீர்த்துக் கொண்டு இருக்கிறான். அதாவது "ஜீவானந்தம் குடும்பத்தை நானே போட்டு தள்ளி இருப்பேன். இந்த கிழட்டு பய தான் என்னை இழுத்துட்டு வந்துட்டான்" என்கிறார். அதற்கு குணசேகரன் அப்பத்தாவிடம் ஜீவானந்தத்திற்கு எதிராக கையெழுத்து வாங்கி அரெஸ்ட் வாரண்ட் கூட வாங்கியாச்சு என்கிறார்.

பதிலுக்கு கதிர் "முடியாது, அந்த தாடிகாரனை நான் என் கையாள கொல்லனும்" என்கிறார். அதற்கு கதிர் "இந்த வீட்டு பொம்பிளைகளை சும்மா விடக்கூடாது அடக்கி வைக்கணும்" என்கிறார். இந்நிலையில் நந்தினி மிகவும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருக்கிறார். அதாவது "இந்த வீட்டை விட்டு போகமாட்டேன். இவர்களுக்கு நான் யார் என்பதை காட்டாமல் விடமாட்டேன்" எனக் கூறுகின்றார். 


அந்த சமயத்தில் ஜனனி வீட்டுக்கு வருகிறார்.ஜீவனந்தத்திற்கு நடந்த கொடுமை பற்றியே நினைத்து நினைத்து அழுது கொண்டு வருகிறார். இதனைப் பார்த்தவர்கள் என்ன நடந்தது, எதற்கு அழுகிறாள் என கேட்கிறார்கள். பதிலுக்கு ஜனனி "அங்க ஜீவானந்தம் மனைவியை என் கண்ணு முன்னாடியே சுட்டுட்டாங்க அக்கா" என சொல்லி நடந்த அனைத்தையும் சொல்கிறார்.

மேலும் "என் கண்ணு முன்னாடியே ஒரு உயிர் போயிடுச்சு. என்னால எதுவும் செய்யமுடியல. அந்த குழந்தை அழுதது என்னோட காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு. அந்த வெண்பா பாவம்" எனவும் அழுத வண்ணம் சொல்கிறார் ஜனனி. அதுமட்டுமல்லாது "யாரு சுட்டது என தெரியல. வெண்பாவை நான் பாத்துக்குறேன் நீ போன்னு என்ன அனுப்பிட்டாரு அக்கா. அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கு தெரியல என்கிறார்.

அத்தோடு "அவரோட அழகான குடும்பத்தை தன்னோட சமூக போராட்டம் பாதிச்சிட கூடாதுன்னு குடும்பத்தை வெளியுலகத்திற்கு காட்டாமலேயே வைச்சு இருக்காரு. இரண்டு மூணு மாசத்துக்கு ஒரு முறை தான் ஊருக்கு போய் குடும்பத்தை பாப்பராம். பாலோ செய்து சுட்டு கொன்னுட்டாங்க" எனவும் கூறுகின்றார் ஜனனி. இதைக் கேட்டதும் ஈஸ்வரியும் விம்மி விம்மி அழுகின்றார். 

பின்னர் ஜனனி "ஜீவானந்தம் கெட்ட ஆளு இல்ல. அப்பத்தா எழுந்து பேசினா தான் எல்லாம் தெளிவா தெரியும்" என அவர்களிடம் சொல்கிறார். அதற்கு அவர்கள் அப்பத்தா எழுந்ததை பற்றி சொன்னதும் ஜனனி அதிர்ச்சியாகிறாள். அவளிடம் நடந்த அனைத்தையும் சொல்கிறார்கள்.


மேலும் நந்தினி "அப்பத்தா சொன்னது போல அவங்களை காப்பாத்த தான் ஜீவானந்தம் சொத்தை தன் பெயரில் மாத்தி எழுதி இருக்காரு" என்கிறார். இதனையடுத்து ஜனனி "இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு. அது என்னனு அப்பதாகிட்ட நான் கேட்டா சொல்லுவாங்க" என சொல்லிவிட்டு அப்பத்தாவை பார்க்க செல்கிறாள். அப்போது குணசேகரன் வாசலில் உட்கார்ந்து கொண்டு ஜனனியை முறைத்துப் பார்க்கின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement