• Sep 20 2024

அப்துலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கொடுக்கப்பட்ட தண்டனை – ராஜா ராணி 2 எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெஸ்ஸியை வீட்டுக்கு கூட்டி வந்ததும் சிவகாமி ஆதிக்கும் ஜெசிக்கும் அறிவுரை சொல்கிறார்.

மறுபக்கம் காட்டுக்குள் நடந்த போட்டியில் அப்துல் தேடிப்பிடித்து புது கம்பெனிற்கு வந்து கௌரி மேடம் விடம் நான் தான் ஃபர்ஸ்ட் என சொல்ல நீங்க செகண்ட் என்ன சொல்லி சந்தியா தான் முதல என சொல்ல அப்துல் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர் எல்லோரும் வந்துவிட ஜோதி மட்டும் வராமல் இருக்க சந்தியா ஜோதி இல்லை என சொல்ல பிறகு இரண்டு டீமாக பிரிந்து எல்லோரும் ஜோதியைத் தேட தீவிரவாத கும்பல் ஜோதியை தூக்கி சென்று ஒரு இடத்தில் போட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர்.

இதன் பிறகு ஜோதியை தேடி கண்டுபிடித்த பிறகு ஜோதி ஒரு பாறையின் மீது மயங்கி விழுந்தேன் ஆனால் இங்கு எப்படி வந்தேன் என தெரியவில்லை என சொல்கிறார். மேலும் காம்பஸ் ஒர்க் ஆகவில்லை என சொல்ல சந்தியா என்னுடைய ஏதும் வொர்க் ஆகவில்லை என சொல்ல கௌரி மேடம் அதற்கு வாய்ப்பே இல்லை என சொல்கிறார்.

பின்னர் சக போட்டியாளர் ஒருவர் அப்துல் தான் நேற்று இரவு காம்பஸ் எடுத்து பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்ல கௌரி மேடம் திட்டியிருக்கிறார். நான் சும்மாதான் எடுத்து பார்த்தேன் ஆனா நான் எதுவும் பண்ணல என அப்துல் சொல்ல கௌரி மேடம் இதற்காக உங்களுக்கு கண்டிப்பாக பனிஷ்மென்ட் இருக்கு கேம்ப விட்டு உடனே வெளியே போங்க என கூறுகிறார்.

அத்தோடு சந்தியாவும் ஜோதியும் அதெல்லாம் வேண்டாம் அவர் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை கொடுக்க வேண்டாம் என கௌரி மேடம் பேசு அவரது முடிவை மாற்ற வைக்கின்றனர். பிறகு சந்தியா சரவணன் இடம் நடந்த விஷயங்களை சொல்ல அவர் சந்தியாவை ஊக்கப்படுத்துகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement