• Sep 21 2024

பணத்தை ரெடி பண்ணிய மூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி- மீனாவை கடுப்பாக்கிய முல்லையின் அம்மா- தனம் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லையின் அப்பா நான் போய் பணம் கேட்கிற எல்லோருமே இப்போ காசு இல்லை என்று தான் சொல்லுறாங்க என்ன செய்யிறது என்றே தெரில என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் மூர்த்தி உள்ளே வருகின்றார். அவர் தனத்திடம் முடிந்த வரை முயற்சி செய்து பாதிப்பணம் திரட்டியாச்சு இன்னும் கொஞ்சம் பணம் தான் சேர்க்கனும் அதையும் எப்படியாவது சேர்த்திடுவேன் என்று சொல்கின்றார்.


இதனால் அதிர்ச்சியடைந்த தனம் தன்னுடைய நகைகளையும் பாண்டியனுடைய நகைகளையும் கழட்டிக் கொடுக்கின்றார். முதலில் வாங்க மறுத்த மூர்த்தி பின்பு வேற வழியில்லாமல் நகையை வாங்கிக் கொண்டு போய் அடைவு வைததுக் கொண்டு பாங்கிற்குக் கிளம்பிச் செல்கின்றார். அங்கே உள்ள ஆபிஷர் பணத்தை கொடுங்க காலையில் வந்து கேஷை வாப்பஸ் வாங்குகின்றேன் என்று சொல்கின்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி வக்கீலை வைத்துப் பேசி சமாதானம் செய்து விட்டு அவர்களை இப்பவே இந்த கேஷை வாப்பஸ் வாங்க சொல்ல அவர்களும் சம்மதிக்கின்றனர். இந்த நேரம் பார்த்து பணத்தைக் கொண்டு வந்த ஜுவாவையும் கூட்டிக் கொண்டு கதிரைப்பார்க்க போலீஸ் ஸ்டேஷன் செல்கின்றனர்.


அங்கே பணம் கட்டி முடிந்தவுடன் கதிர் வெளியே வந்ததும் போலீஸ் அட்வைஸ்ட் கூறுகின்றார். அதே போல கண்ணனையும் மூர்த்தி திட்டுகின்றார். கண்ணன் இனிமேல் இந்த தப்பு பண்ணமாட்டேன் என்று கூறுவதோடு ஜீவாவையும் கதிரையும் மாறிமாறி கட்டிப்பிடித்து அழுகின்றார். பின்னர் அனைவரும் கதிரைக் கூட்டிக் கொண்டு வர முல்லை ஓடிப் போய் கதிரை கட்டிப் பிடித்து அழுகின்றார்.

மீனா கதிரை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். ஆரத்தி எடுக்கும் போது முல்லையின் அம்மா மீனாவின் அப்பா தனம் இவங்களால தான் கண்ணு பட்டிருச்சு என்று சொல்ல மீனா உங்க கண்ணு மட்டும் படல எனச் சொல்லி நக்கலடிக்கின்றார். பின்னர் கதிரைக் கூட்டிக் கொண்டு உள்ளே போகின்றனர் இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement