• Sep 20 2024

நயன் திருமணத்தில் முன்னாள் காதலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா; ஆசைக் காதலிக்கு என்ன பரிசு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஏழு வருட காதலை கடந்த நயன்- விக்கி தம்பதியினர் நாளை திருமண பந்தத்தில் கைகோர்க்க உள்ளனர். திருமணத்திற்காக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெறித்தனமாக நடைபெற்று வருகின்றது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அவர்களது திருமணத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் திருமணத்திற்கு சிம்புவும்,பிரபு தேவாவும் என்ன பரிசு கொடுப்பார்கள் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கிளம்பியிருக்கிறது.

நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்து விட்டனர்.அதன் பிறகு எல்லாம் மறந்து இருவரும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நண்பர்களாகி விட்டனர். இந்நிலையில் தன் தோழி நயன்தாராவின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பாரா என்று சமூகவலைத்தளங்களில் பேசி கொள்கிறார்கள்.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்ரார் நயன்தாராவுக்கு பிரபுதேவா பரிசு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் நடிப்பதாக கூறப்படுகிறது.பழைய விஷயங்கள் எல்லாம் மனதில் வைத்து கோபப்படும் ஆள் இல்லை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபுக்கும், நடிகர் விக்கி கௌஷலுக்கும் திருமணம் நடந்தது.

அப்பொழுது அவரின் முன்னாள் காதலரான நடிகர் ரன்பிர் கபூர் ரூ.27 கோடி மதிப்புள்ள வைர நெக்ளஸை பரிசாக அளித்தார்.

மேலும் முன்னாள் காதலரான சல்மான் கானோ ரூ.3 கோடி மதிப்புள்ள காரை பரிசாக அளித்தார். அதனால் தான் கத்ரீனா போன்று நயன்தாராவுக்கும் அவரின் முன்னாள் காதலர்கள் பரிசு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement