• Sep 20 2024

ஆதி அளித்த பதிலில் ஜெசிக்கு காத்திருந்த அதிர்ச்சி-ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி-2.இத் தொடரில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

எல்லோரும் ஜெசியின் கர்ப்பத்துக்கு காரணம்  எங்கள் பிள்ளை இல்லை என கூறும்போது  ஜெசி கூறுகின்றார் என்னைன திட்டுற நீங்கள் ஆதியை கேளுங்க  அவனை பதில் சொல்ல சொல்லுங்க   வாயை திறந்து சொல்லு என கேட்கிறார். 

ஆதி அமைதியாகவே இருக்க இதுவரைக்கும் எல்லோரும் என்கிட்ட தான் கேட்டுக்கிட்டு இருக்கீங்க அது ஏன் யாரும் பதில் சொல்ல சொல்லி கேட்கல அவன் அமைதியாகவே இருக்கான் என சொல்ல சரவணன் ஆதியை அடித்து வாய் மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம். பதில் சொல்லுடா என கேட்கிறார்.



ஆனாலும் ஆதி அமைதியாகவே இருக்க அதன் பின்னர் சிவகாமி ஆதியை பார்த்து பதில் சொல்ல சொல்லி கேட்க ஆதி இந்த பொண்ணு சொல்றது எதுவும் உண்மை இல்லை. எனக்கு இந்த பொண்ணை தெரியும் பேரு ஜெசி இரண்டு மூணு தடவை பேசி இருக்கேன் அவ்வளவுதான். இந்த குழந்தைக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சொல்ல ஜெசி பேரதிர்ச்சி அடைகிறாள். அடுத்ததாக கொஞ்ச நேரம் கழித்து ஜெசி அர்ச்சனாவிடம் உங்களுக்கு தெரியும் இல்ல நாங்க இரண்டு பேரும் காதலித்த விஷயம் நீங்களாவது சொல்லுங்க என கேட்க அர்ச்சனா அமைதியாகவே இருந்து விடுகிறாள்.

எனினும் இதனையடுத்து சிவகாசி மற்றும் வள்ளி இருவரும் உங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லு இல்லன்னா வெளியே போய் நில்  என சொல்ல ஜெசி போன் போட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கிறார். 



இதன் பிறகு ஆதியோட போன்ல என்னோட சாட் பண்ணதெல்லாம் இருக்கும் செக் பண்ணுங்க என சொல்ல சரவணன் போனை வாங்கி சந்தியாவிடம் கொடுக்க போனில் எந்த சாட்டும் போட்டோவும் இல்லை என சந்தியா கூறுகிறார். சரி உன்னோட போன்ல இருக்கும்ல அதை காட்டு என ரவி கேட்க என் போனை அப்பா வாங்கி பாப்பாரு அதனால எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டேன் என சொல்ல ஆதி நிம்மதி அடைகிறான்.

அத்தோடு வெளியே போ என மீண்டும் சிவகாமி சொல்ல நீதி கிடைக்கிற வரைக்கும் நான் வெளியே போக மாட்டேன் என நடுவீட்டில் அமர்கிறார் ஜெசி. இதன் பிறகு ஜெஸ்ஸியின் பெற்றோர்கள் வந்து அவளை என்ன நடந்துச்சு என கேட்டு அடிக்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அடுத்ததாக வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்தியாவுக்கு ஆதிமிதும் தப்பு இருக்கலாம் என சந்தேகம் வர அது குறித்து சரவணனிடம் பேசுகிறார்.


Advertisement

Advertisement