• Sep 20 2024

தந்தையுடன் இணைந்து செயலாற்ற அச்சப்படும் பிரபல நடிகை - வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட் ஆவார். இவர் 2007இல் ஹிந்தியில் வெளிவந்த ' ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் ' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரையுலகில் கால்பதித்தார்.


அதனைத்தொடர்ந்து பல்வேறுபட்ட சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து இன்று வரை வெற்றிக் கதாநாயகியாகவே திகழ்கிறார். அந்தவகையில் கங்குபாய் கத்தியவாடியில் நடித்த ஆலியா பட்டின் நடிப்பை ரசிகர்கள் அனைவரும் பெரிதும் கொண்டாடியிருந்தனர்.


அதுமட்டுமல்லாது தற்போது முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் நடிகையாகவும்  ஆலியா திகழ்கின்றார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, அவ்வப்போது சினிமா குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அது என்னவெனில் 

ஆலியா பட் ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், தந்தை மகேஷ் பட் உடன் பணிபுரிவது பற்றி பேசுகையில், தினமும் தனது தந்தையுடன் தொடர்பில் இருந்தாலும் சடக் 2 இன் பயணத்தைத் தொடங்க சிறிது பயமாக இருப்பதாக கூறினார்.

மேலும் அவர் தனது கருத்தைப் பெறுவதற்காக எப்படித் துள்ளிக் குதித்தார் என்பதையும், அது தன்னைப் பயமுறுத்தும் அளவுக்கு அவர் எப்படி ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர் என்பதையும் கூறினார்.

அதில் என்ன நடக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும், தன் தந்தை தனக்கு முன்னால் ஒரு சுவர் போடப்பட்டிருப்பதாகவும், அதைக் கிழிக்க விரும்புவதாகவும் தன் தந்தை எப்படி நினைக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தினார். 


Advertisement

Advertisement