நடிகை வரலட்சுமி சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாக இருந்தாலும் சினிமாவுக்குள் எந்த பின்புலமும் இல்லாமல் வந்து ஜெயித்தவர் தான்.
மேலும் தற்போது தன் மகளின் வளர்ச்சியை பார்த்து அவர் மிகவும் பெருமிதமும் அடைந்து இருக்கிறார். வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் வரலட்சுமி.
போடா போடி: அறிமுக படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் வரலட்சுமி. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு கூட நிறைய பேருக்கு இவர் சரத்குமாரின் மகள் என்று தெரியாது. ரொம்பவும் துரு துருவென்று தன்னுடைய வித்தியாசமான நடிப்பினாலும், குரலினாலும் ரசிகர்களின் கவனத்தை இவர் ஈர்த்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சேனல் ஒன்றின் ஷோவில் கலந்துகொள்ளும் போது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.அதாவது '' உங்க அப்பாவுக்கு கால் பண்ணி '' நட்சத்திர யன்னலில் வானம் எட்டி பார்க்குது... என்ற சங்கினை பாட வேண்டும் என்பதாகும்.அதற்கு வரலட்சுமி '' இந்த சாங் பலவாட்டி அப்பாவுக்கு பாடியிருக்கன் பீல் எல்லாம் பண்ண மாட்டேர் எதுக்கும் ட்ரை பண்ணுறன் என்றார்.
கால் பண்ணவுடன் வரலட்சுமி பாட ,அவருடன் ஷோவில் இருந்த ஆடியன்ஸும் பாடினார்கள். மகளின் குரலை கேட்டதும் தமிழ் நாடு அரசு பரிசு கொடுத்தால்,நேஷனல் வரை கொண்டு போகலாம் என கிண்டல் அடித்தார்.இதனை கேட்டு ,ஷோவில் இருந்தவர்களும்,வரலட்சுமியும் சிரித்தர்கள்.
Listen News!