• Sep 20 2024

10 வயதில் அந்தத் தொழிலை செய்யும் பிரபல நடிகையின் மகன்... இந்த வயதிலும் இப்படியா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் 1996-ஆம் ஆண்டு வெளியாகி இருந்த 'மிஸ்டர் ரோமியோ' என்ற படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக கால் பதித்து இருக்கின்றார். 


அதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'குஷி' படத்திலும் தளபதி விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருந்தார். தமிழில் இவருக்கு அந்தளவிற்கு ஆர்வம் இல்லாததனால் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 

இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி வந்த இவர் 2009-ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து இவர் அதிகளவிலான படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.


இதன் காரணமாக ஷில்பா பிசினஸ் பக்கமாக தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வந்தார். அத்தோடு இவர் ஐபிஎல்-லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமண வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதிக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். 


அந்தவகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் 2020-இல் வாடகைத் தாய் மூலம் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்கள். இந்நிலையில் தற்போது 10 வயதாகும் ஷில்பா ஷெட்டியின் மகன் வியான், புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளார். 

அந்தவகையில் VRKICKS என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் மூலம் பிரத்யேகமாக ஷூக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவ்வளவு சிறிய வயதிலேயே பிசினஸ் தொடங்கி உள்ள தனது மகனை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனத்தின் முதல் ஷூவை ஷில்பா ஷெட்டி வாங்கி அவரை குஷிப்படுத்தியுள்ளார்.


மேலும் ஷில்பா தனது மகனின் பிசினஸ் குறித்து இன்ஸ்டாகிராமில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து வியந்துபோன ஷில்பா ரசிகர்கள் வியானுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement