கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருபவர் விஜய். சினிமாவில் இதுவரை இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 65 இற்கும் அதிகமான படங்கள் உருவாகியுள்ளன. இவற்றைத் தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படமானது எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.
இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக 'தளபதி 67' இல் நடிக்க இருக்கின்றார். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக உருவாகவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தளபதி 67ல் அமைந்துள்ளது.
இப்படத்தின் உடைய பூஜை நேற்றைய தினம் போடப்பட்டது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை.
இருப்பினும் தற்போது தளபதி 67 படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் ஏற்கனவே A History of Violence எனும் படத்தின் தழுவல் தான் தளபதி 67 என ரசிகர்களால் கூறப்பட்டு வந்தது. ஏறக்குறைய அது உறுதியான தகவல் தான் என்றும், அதே சாயலில் தான் தளபதி 67 கதை அமைந்துள்ளது என்றும் இப்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தளபதி 67 படத்தின் கதைப்படி 50 வயதான கதாநாயகன் விஜய், தனது மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அசபாவிதம் நடக்கிறது. இதனால் அமைதியாகி வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை வன்முறைக்கு எப்படி செல்கிறது என்பதே தளபதி 67 படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
கதையே த்ரில்லிங்காக இருக்கின்றது என்றால் படம் எப்படி இருக்கும் என பல ரசிகர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
Listen News!