விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது. இதில் கலெக்டராக இருக்கும் அபிக்கு தற்போது ஒரு ஆபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அபியின் கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு கற்களை வீசித் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அபி பதற்றத்தில் இருக்கின்றார்.
பின்னர் சென்னை, செங்கல்பட்டு என பல இடங்களிலிருந்தும் போலீஸ் படைகளை இறக்குமாறு உத்தரவிடுகின்றார். அதன் மூலமாக தான் இந்தக் கலவரத்தை அடக்கலாம் என்கிறார்.
அந்த சமயத்தில் வெற்றி முகமூடி அணிந்து கொண்டு அபியின் அறைக்குள் நுழைகிறார். அங்கு சென்று அபியை காப்பாற்றுவதற்காக அவரை கடத்துகின்றார் வெற்றி. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!