இந்தியத் திரையுலகில் மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் சென்னையில் உள்ள ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ்லேன் பகுதியில் அமைந்துள்ள பெரிய வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்த ஆக்டிங் டிரைவர் பாஸ்கர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வடபழனி ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார்.
அந்தவகையில் இவர் துல்கர் சல்மானின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, குடும்பத்தில் உள்ளவர்களை வெளியே கூட்டிச் செல்வது போன்ற வேலைகளை பார்த்து வந்த பாஸ்கர், இன்று அதிகாலையில் துல்கர் சல்மானை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக நேற்றிரவு அவரது வீட்டிலேயே இரவு தங்கினார்.
இரவு உணவுக்கு பீட்ஸாவுடன் கோக்கோகோலா சாப்பிட்டு படுத்துத் தூங்கிய பாஸ்கருக்கு திடீரென நள்ளிரவில் இருமல் அதிகமாக வந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகே இருந்த மற்றப் பணியாட்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் வரும் வழியிலேயே பாஸ்கர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் ஷாக்கிங் தகவலை கூறிய நிலையில், இந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நள்ளிரவில் அவர் உட்கொண்ட உணவு ஜீரணிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸார் துல்கர் சல்மான் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வழக்கும் பதிவு செய்துள்ளனர். அத்தோடு டிரைவர் பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவு வந்தவுடன் தான் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Listen News!