• Sep 20 2024

கண்ணம்மாவை கொலை செய்ய துணிந்த தீவிரவாதி- யாரை சுட்டாங்க என்று தெரியாமல் தவிக்கும் சௌந்தர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா சக தீவிரவாதியை கொன்றதால் தீவிரவாத தலைவன் அவளை கொல்ல துணிந்த நிலையில் எதற்காக கொன்னேன் என தெரிஞ்சுக்கோங்க என சொல்லி கண்ணம்மா நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார். 

இதனால் தீவிரவாதி ஜர்க்காக செல்வம் இவ சொல்றத நம்பாத பொய் சொல்லி நம்பல திசை திருப்ப பார்க்கிறார் என கூறுகிறார். இதனால் தீவிரவாத தலைவன் மீண்டும் கண்ணம்மாவை சுட முயற்சி செய்ய அந்த நேரத்தில் சக பெண் தீவிரவாதி கண்ணம்மா சொன்னது அனைத்தும் உண்மைதான். நம்மளுடைய சகோதரன் தப்பானவன்.


அவன் ஆறு பெண்களை மட்டுமல்ல பல பெண்களை சீரழிச்சிருக்கான் அதை நானே என் கண்ணால பார்த்து விட்டேன். நான் அவனுக்கு பாடம் சொல்லியும் அவன் அதை புரிந்து கொள்ளவில்லை என கூறுகிறார். இதனால் தீவிரவாதி அவனை சுட்டு தள்ளி வெளியில் தூக்கி போட அனைவரும் பதற்றம் அடைகின்றனர்.

இந்த பக்கம் சௌந்தர்யா யாரை சுட்டாங்க? பாரதிக்கு என்ன ஆச்சு என தவித்துக் கொண்டிருக்க தீவிரவாத தலைவன் போலீஸ் அதிகாரிகளிடம் எங்களுடைய சகோதரன் தான் சுட்டு வெளியே அனுப்பி வைத்தோம் அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டான். எங்களுடைய கொள்கைக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டான் அதனால் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூறுகிறார். 

மேலும் இதற்காக பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறுகிறார்.பிறகு இந்த சம்பவம் செய்திகளில் பரபரப்பாக வெளியாகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Advertisement

Advertisement