லோகேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. இது நாளை ரிலீஸ்ஆகவுள்ள நிலையில் லியோ திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் பிரச்சினை எழுந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில். பிரபல தியேட்டரில் லியோ ரிலீஸ் செய்யப்படமாட்டாது என பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் செய்யப்படமாட்டாது என குறிப்பிட்டு போட் வைக்கபட்டுள்ளது. லியோ திரைப்படத்திற்கு டிக்கட் வாங்க வருகை தந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சி வார்த்தை சுமூகமாக முடியவில்லை என்பதை காட்டுவதற்காகவே ரோகிணி தியேட்டர் முன் "லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படாது " என பலகை வைக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்களப்படுத்தும் திரையரங்குகளில் ரோகிணி தியேட்டரும் ஒன்று இன்று இங்கு லியோ திரைப்படத்திற்கு டிக்கட் வாங்க வருகை தந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
Listen News!