• Sep 20 2024

த்ரிஷா விவகாரம்; நடிகர் மன்சூர் அலிகானிடம் நிறைவடைந்த விசாரணை! சற்றுமுன் வெளியான தகவல்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு  செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து மன்சூர் அலிகான் மீது நடவக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், அவர்மீது இரு பிரிவுகளின்கீழ் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 


எனினும், அவர் விசாரணைக்கு ஆஜராகமல் தலை மறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தான் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தற்போது பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார் மன்சூர் அலிகான். இதை தொடர்ந்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு விசாரணை நடாத்தி  உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இவரின் வாக்குமூலம், எழுத்து வடிவம், காணொளி வடிவத்தில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement