• Sep 20 2024

புது ஊருக்குச் சென்ற கண்ணம்மாவுக்கு காத்திருந்த டுவிஸ்ட்- புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபலங்கள்- பாரதி எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்படங்களுடன் ஒளிபர்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. எனவே அந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா மற்றும் குடும்பத்தினரைத் தேடிப் போவதாக கூற எல்லோரும் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் பாரதி எதையும் கேட்காமல் நான் தானே தப்பு பண்ணினேன் நான் பண்ணின தப்புக்கு நான் தானே முடிவுக்கு கொண்டு வரணும். நான் மறுபடியும் வீட்டுக்கு வருவதாக இருந்தால் என் குழந்தைகள் மற்றும் கண்ணம்மாவுடன் தான் வருவேன். இது தான் பாரதியினுடைய சபதம் என்று கூறி கிளம்புகின்றார்.


இதனைத் தொடர்ந்து தனது அப்பாவினுடைய சொந்த ஊருக்கு வந்த கண்ணம்மா பிக்பாஸ் தாமரையின் வீட்டிற்கு வந்து அவருடைய அப்பாவிடம் வீடு வாடகைக்கு கேட்டு வாங்குகின்றார்கள்.பின்னர் தாமரை பூட்டியிருந்த வீட்டைத் திறந்த காட்டுகின்றார்.அத்தோடு இனிமேல் இங்கு தான் இருக்கப் போகின்றோம் வீடு பிடிச்சிருக்கா என கண்ணம்மா லக்ஷ்மி மற்றும் ஹேமாவிடம் கேட்கிறார்.

அவர்களும் வீடு பிடிச்சிருக்கு என்று கூறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க பாரதி வீதி வீதியாக கண்ணம்மாவைத் தேடி அலைகின்றார்.அப்போது கண்ணம்மாவின் சித்தியின் தம்பி கணபதியை காண்கின்றார். அப்போது கணபதி கண்ணம்மாவுடன் மாமனாரும் சேர்ந்து சென்ற விடயத்தைக் கூறுகின்றார்.இதனால் கணபதியும் பாரதியும் சேர்ந்து கண்ணம்மாவைத் தேட முடிவு செய்தனர்.


மேலும் கண்ணம்மா 10 வருடத்திற்கு முதல் இருந்த இடத்திற்குச் செல்கின்றனர். தொடர்ந்து கண்ணம்மாவின் அப்பா கண்ணம்மாவிற்கு எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைக்கின்றார்.அத்தோடு கண்ணம்மாவுக்கு ஆறுதலும் தெரிவிக்கின்றனர்.பின்னர் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் சமையல் வேலை இருப்பதாகவும் கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடிவதைக் காணலாம்.


















Advertisement

Advertisement