சின்னத்திரை ஆரம்பித்த காலத்திலிருந்து ஒவ்வொரு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இது சொல்ல மறந்த கதை.
இந்த சீரியலில் ரச்சிதா கதாநாயகியாகவும் விஷ்ணு கதாநாயகனாகவும் நடித்திருந்து வந்தனர். இரண்டு பிள்ளைகளை வளர்க்க போராடும் பெண்ணின் வாழ்க்கையை இந்த சீரியல் எடுத்துக் காட்டியது.
அத்தோடு கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் டி ஆர் பியில் பின்னுக்குத் தள்ளப்பட்டதால் முடிவுக்கு வரவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி இந்த சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளதோடு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியலில் ரசிகர்கள் இதனை மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
Listen News!