• Sep 20 2024

"அடுத்த மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட் வெளியாகும்"- செல்வராகவன் கூறிய புதிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் தான் செல்வராகவன். இவரது இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இன்றுவரை இளைஞர்களுக்கு பிடித்தமான செல்வராகவன் படங்களில், முக்கியமான படமாக இப்படம் காணப்படுகின்றது.

சோழப் பேரரசின் வீழ்ச்சி மற்றும் பாண்டிய பேரரசின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் செல்வராகவன் கற்பனையில் உருவானது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டதோடு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிப்பதை செல்வராகவன் உறுதிப்படுத்தினார். மேலும் தனது கதாபாத்திரத்தின் ஓவியத்தை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படம் 2024 இல் ரிலீஸ் ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் செல்வராகவன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன் "அடுத்த ஒரு மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் படத்தின் அப்டேட் வெளியாகும்" என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement