• Sep 20 2024

வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்ததும் விக்ரம் வெளியிட்ட வீடியோ- என்ன சொல்லியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்ரம் முதல் முறையாக தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பல செய்திகள் வெளியானது. இதுகுறித்து விக்ரமின் மேலாளர் சூர்ய நாரயணன் வெளியிட்ட பதிவில் “விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.மேலும் இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறோம்” என தெரிவித்து இருந்தார்.

அதே போல தன் தந்தையின் உடல் நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்ட விக்ரமின் மகன் துருவ் ‘அன்பான ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்… என் தந்தைக்கு நெஞ்சில் லேசான அசௌகரியம் ஏற்பட்டதாலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியானவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகள் எங்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

எனினும் இந்த நேரத்தில் எனது தந்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சீயான் நலமுடன் இருக்கிறார். ஒரு நாளில் தந்தை வீடு திரும்பவார். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பதிவின் மூலம் வதந்திகள் எல்லாம் களையப்பட்டு தெளிவான புரிதல் உண்டாகும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்ரம் தி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விக்ரம் முதல் முறையாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ‘நீங்கள்காட்டிய அன்பும் அக்கறையும் பார்த்து நான் வியந்து போனேன். என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் அக்கரைக்கும் மிக மிக நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement