சீரியலுக்கு பேர் போன சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியலானது கல்லூரிக் காதலை மையமாக கொண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த சீரியலினுடைய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலாவை கண்டதும் அவரை வெறுப்பேற்றும் வகையில் ஷிவானி சூர்யா இருவரும் பேசிக் கொள்கின்றனர். அதாவது ஷிவானி "இங்க பாரு சூர்யா நீ ஏற்கெனவே love பண்ணி பிரேக் அப் பண்ணி இருக்காய், அந்தப் பொண்ணு உன்னை வேணாம் என்று ஓப்பனாவே சொல்லிட்டா, வேணாம் என்று சொல்லுற பெண்ணை விட்டிடணும் சூர்யா. நான் உங்கிட்ட நேரடியாக காதலை சொல்லாவிட்டாலும் மறைமுகமாக எத்தனையோ வழியில் உன்னை ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன், நான் உன் மேல காதலாகி இருக்கேன் என்று உனக்கு எப்போ ஆவது பீல் ஆகி இருக்கா இல்லையா I LOVE YOU சூர்யா' எனக் கூறுகின்றார்.
அதனை சூர்யாவும் வெண்ணிலாவை வெறுப்பேற்றுவதற்காக ஷிவானி பண்ணிய ட்ராமா என நினைத்து அசால்ட்டாக நிற்கின்றார். ஆனால் இதனை பார்த்த வெண்ணிலாவோ அதிர்ச்சி கலந்த கோபத்தில் உறைந்து கொள்கின்றார். மேலும் ஷிவானி கூறியதை பார்க்கும் போது அவர் சூர்யாவை உண்மையிலும் love பண்ணுவது போல் தெரிகிறது. ஆகவே இனிவரும் எபிசோடுகளின் வாயிலாக சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பார்ப்போம்.
Listen News!