விஜய் தாெலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
இந் நிலையில் , கடந்த வாரம் வன்முறை பேச்சால் மஞ்சள் நிற அட்டை வாங்கிய விஜய் வர்மா கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சக போட்டியாளர் பிரதீப்பிடம் கடினமாக நடந்து கொண்டுள்ளார். ஏற்கனவே பிரதீப்பிற்கு விஜய் வர்மாவிற்கும் கடந்தவாரம் மோதல் ஏற்பட்ட நிலையில் , விஜய் பழைய பகையில் மனதில் வைத்து கொண்டு தான் இப்படி நடந்து கொண்டுள்ளார் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் ஓட்டிங் பட்டியலில் குறைவான வாக்குகள் பெற்று விஜய் வர்மா வெளியேறவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
Listen News!