அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார்.
நிகிலா விமல் மற்றும் சரத்பாபு முக்கிய ரோலில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாக இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 5.25 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.மூன்று நாட்களில் இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வசூல் என கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் வசூல் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!