தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட படஙங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் தெலுங்கு நடிகர் சர்வானந்த். தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் ரக்ஷிதா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த மே 28ம் தேதி ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே சர்வானந்த் வந்து கொண்டிருக்கும் போது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் ஓரம் மோதி விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் நடிகர் சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு குவிந்த பொதுமக்கள் சர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருமணத்துக்கு 5 நாட்கள் முன்னதாக இப்படியொரு விபத்து நடந்த நிலையில், அவரது திருமணம் நடக்குமா? தள்ளிப் போகுமா? என கேள்விகள் கிளம்பின.இந்த நிலையில் இவர் ஜூன் 3ம் தேதி இரவு 11 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள பழம்பெரும் அரண்மனையில் பிரம்மாண்டமாக தனது திருமணத்தை செய்துள்ளார். தனது காதலி ரக்ஷிதா ரெட்டியின் கழுத்தில் தாலி கட்டிய சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நடிகர் சர்வானந்த் மற்றும் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டி இருவரும் திருமணக் கோலத்தில் ராஜ உடையில் செம அழகாக அணிகலன்களுடன் ஜொலித்த புகைப்படங்கள் தற்போது வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Sharwanand ஹாஷ்டேக்கில் சர்வானந்த் திருமண புகைப்படங்களும் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!