விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-2 .இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…
நகை திருடிய அர்ச்சனா அதை சாணிக்குள் மறைத்து வெரட்டியாக தட்டி வைக்கிறாள். பின்னர் வீட்டுக்குள் எல்லாரும் நகையை எங்கேயும் காணவில்லை என சொல்லிக் கொண்டிருக்க அர்ச்சனா நின்று கொண்டிருப்பதை பார்த்து செந்திலுக்கு சந்தேகம் வருகிறது.
பினனர் கண்ணம்மா சாப்பிடலாமா என கேட்க சமைக்கவே மறந்துட்டேன் என சந்தியா சொல்ல நான் சமைத்து விட்டேன் என சொல்லி எல்லோரையும் சாப்பிட அழைக்கிறார். பிறகு சௌந்தர்யா போன் போட்டு நடந்த விஷயத்தை விசாரிக்க கண்ணம்மா எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். மேலும் அவர் எனக்கு உறுதுணையாக இருக்காரு என சொல்கிறார்.
ரூமுக்குள் சிவகாமி அழுது புலம்புவதை பார்த்த சரவணன் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் அம்மாவை இப்படி பார்க்க முடியவில்லை என சொல்கிறார்.. சந்தியா நகை வீட்டுக்குள்ள தான் இருக்கிறது என சொல்வது கேட்டு அர்ச்சனா பதற்றம் அடைகிறாள்.
பின்னர் இரவு நேரத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் மனம் விட்டு பேசி சிரிக்கின்றனர். மறுநாள் காலையில் பால்காரன் பால் தர மறுக்கிறார். இதை மயிலு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல எல்லோரும் அதிர்ச்சியாக இருக்க அந்த நேரத்தில் சரவணன் அப்பா மளிகை கடைக்காரன் பொருட்களை தர மறுக்கிறான் என வீட்டுக்கு வருகிறார். மேலும் செந்தில் கடைக்கு யாரும் வரவில்லை கடையை காலி பண்ண சொல்கிறார்கள் என கூறுகிறார். பார்வதி அவரது மாமியார் அழைத்து வந்து வீட்டில் விட்டு செல்கிறார்.
இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான் முதலில் இந்த கேட்டு வாபஸ் வாங்கினால் எல்லாம் சரியாகிவிடுமென சிவகாசி சொல்ல சரவணன் கேஸை வாபஸ் வாங்க முடியாதுன கூறுகிறார். இதனால் இனி உனக்கும் எனக்கும் இருந்த அம்மா மகன் உறவு முடிந்து போச்சு. நான் செத்தா கூட நீ என்ன பார்க்க வரக்கூடாது எனக்கு கொல்லி போடக்கூடாது, செந்தில் அதை செய்தால் போதும் என கூறுகிறார்.
மேலுமு் இந்த பிரச்சனைகளுக்கு பிறகு அர்ச்சனா வெளியில் வந்து ஒரு கோடி ஒரு கோடி என அவர் தட்டிய வரட்டிகளுக்கு காவல் காக்கிறார். இந்த நேரத்தில் செந்தில் வெளியே வந்து அர்ச்சனாவை திட்டி வீட்டுக்குள் அனுப்புகிறார். நைட்ல இருந்து இவ நடவடிக்கையை சரியில்லையே என சந்தேகப்படுகிறார் செந்தில். இத்துடன் இன்றைய ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.
பிற செய்திகள்
- மாறனின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட பார்த்தீபன்..!
- விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தின் ட்ரைலர்
- சிம்பு எனக்கு அண்ணன் மாதிரி…பேட்டியில் அந்தர் பல்டி அடித்த ஸ்ரீநிதி..!
- ஜெயிலர் படத்திற்கு வந்த புதிய சிக்கல்: நடந்தது என்ன..?
- முன்னணி நடிகர்களான டாம் க்ரூஸ், வில் ஸ்மித் சம்பளங்கள் இவ்வளவா..வெளியானது முழு விபரம்..!!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!