தமிழ் சினிமாவில் குறைந்த காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்ற இயக்குநராக வலம் வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் காஜல் அகர்வால் ,யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு இவரே நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம். எதிர்பார்த்ததை விட அதிக வசூல் சாதனை படைத்து பெரும் வெற்றியை கொடுத்தது.அதனையடுத்து மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன் அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது தனது முதல் பட அனுபவம் குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அதாவது முதல் படத்தின் வாய்ப்புகளுக்காக பிரதீப் ரங்கநாதன் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த விஷயம் தனது வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்.இதற்காக ஏற்கனவே வேலை பார்த்த பொழுது வீட்டிற்கு தெரியாமல் காசு சேர்த்து வைத்துள்ளார். ஆறு மாதம் முன்பு வேலையை விட்டு நின்று விட்டு இந்த ஆறு மாதத்திற்கும் சம்பளத்திற்காக, சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுத்து சமாளித்துள்ளார்.
வீட்டிலும் அவர் வேலைக்கு செல்கிறார் என்று நினைத்து இருந்திருக்கின்றனர். ஆனால் அந்த ஆறு மாத காலம் அவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி அலைந்திருக்கிறார். பிறகு வாய்ப்புகளை பெற்று படத்தில் கமிட்டான பிறகுதான் அவர் வீட்டில் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் சினிமாவில் இயக்குநராக அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இந்த விஷயத்தை செய்துள்ளார் இதை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
Listen News!