• Sep 20 2024

அண்ணனுடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பிற்கு மறுப்புத் தெரிவித்த தம்பி... அட இப்படி ஒரு காரணமா...?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக முன்னேறி வருபவர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், சூர்யாவின் தம்பியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே. சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது திறமையினால் இன்று தனக்கெனவும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார்.




மேலும் சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்றுவரை ஓய்வில்லாமல் இவருக்கு பல பட வாய்ப்புக்களும் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன. அதுமட்டுமன்றி சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றார்.



இந்நிலையில் கார்த்தி நடிப்பிலும், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்திலும் உருவாகி சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் 'விருமன்'. 'கொம்பன்' திரைப்படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளது. மேலும் 'விருமன்' திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்திருக்கும் முக்கிய திரைப்படங்களான 'பொன்னியின் செல்வன்', சர்தார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.


இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றிலே பல சுவாரஸ்யமான விடயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தான் அண்ணனுடன் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை தவற விட்டுள்ளேன் எனக் கூறியிருக்கின்றார். 



அதாவது சூர்யா, சித்தார்த், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆய்த எழுத்து'. அதாவது பெரியளவில் வெற்றியடைந்த இப்படத்தில் நடிகர் கார்த்தியும் நடிக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகின்றது. அதன்படி சித்தார்த் நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்தியை கேட்டுள்ளார் அப்படத்தின் இயக்குநரான மணிரத்னம். 


ஆனால் கார்த்தியோ தான் உதவி இயக்குநராகவே வந்ததாகவும் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் அப்போது கூறிவிட்டாராம். இவ்வாறாக அண்ணனுடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பினை மறுத்திருக்கின்றேன் என கார்த்தி கூறியுள்ளார். இவர் கூறிய இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.  

Advertisement

Advertisement