• Sep 20 2024

படுத்த படுக்கையாக இருக்கும் சுடர்... பார்க்க விடாமல் தடுக்கும் அபி... வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்ட வெற்றி.. 'Thendral Vanthu Ennai Thodum' Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சுடர் படுத்த படுக்கையாக இருக்கின்றார். ஊரில் இருந்து வரும்போதே சுடர் காய்ச்சலுடன் தான் வந்தார் என விஜி கூறிக் கொண்டிருக்கின்றார். அப்போது சுடர் "சிம்பா சிம்பா" எனச் சொல்லி முனகிக் கொண்டிருக்கின்றார்.

வெற்றியை வர வைத்து அவரைப் பார்க்க சொல்லுமாறு தந்தை கூற பதிலுக்கு அபி "இவளுக்கு காய்ச்சல் வந்தது டெங்கு தான், அவர் இல்லை, டாக்டரிட்ட கூட்டிற்று போய்ட்டு சரி பண்ணிடலாம்" என்கிறார்.


அந்த சமயத்தில் அபி வீட்டிற்கு சுடரைப் பார்ப்பதற்காக வெற்றி வருகின்றார். ஆனால் சுடரை பார்க்க விடாமல் வெற்றியை அபி தடுக்கிறார். அதுமட்டுமல்லாது வெளியே போகுமாறு துரத்துகின்றார். பதிலுக்கு வெற்றி கோபத்தில் "நிறுத்து, என்ன மிரட்டுறியா..?" எனக் கேட்கின்றார். பின்னர் விஜியிடம் சுடர் எங்க? அவளுக்கு என்ன ஆச்சு? என வெற்றி கேட்க, அவளுக்கு டெங்குக் காய்ச்சல் என விஜி பதிலளிக்கின்றார்.


மேலும் "என் வீட்டில் என்ன நடந்தால் உனக்கென்ன" என அபி வெற்றியிடம் கேட்கின்றார். அதற்கு வெற்றி "இது முதலில் உன் குழந்தையே கிடையாது. விஜி அம்மாவின் குழந்தை தானே? நீ எதற்கு எனக்கு தடுக்கிறாய்? இந்த விஷயத்தில் தலையிட உனக்கு உரிமை கிடையாது" எனக் கோபத்துடன் கூறிவிட்டு சுடரைப் பார்க்க உள்ளே நுழைகின்றார். 


Advertisement

Advertisement