சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன.
இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் ஈஸ்வரி மற்றும் ஜனனி ஆகியோர் அரசை சந்திக்கின்றனர். அதற்கு அரசு "இனி தான் அவனுக்கு பெரிய அடியே இருக்கு, நீங்க எல்லாரும் அவனால நிறைய கஷ்டப்பட்டிருக்கீங்க, அதற்கு என் மூலமாக உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" எனக் கூறுகின்றார்.
மறுபக்கத்தில் ஆதிரை குணசேகரனைப் பார்த்து "மண்டபத்தில் வைச்சு பண்ணினது எல்லாமே ராமாவா..?, அப்பத்தாக்கிட்ட கையெழுத்து வாங்கத் தான் இது எல்லாமேவா எனக் கேட்டு அழுகின்றார். அதற்கு குணசேகரன் கோபத்தில் 'ஏய்' எனக் கத்துகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!