தமிழ் சினிமாவில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பார்த்திபன்.முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடி சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது.
அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன்.படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபன் வல்லவர். இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை.
இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை. இதனால் சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இவரது இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்து இயக்கும் படத்திற்கு தான் இசையமைக்க முடியாது என கூறிவிட்டாராம்.
அது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் அனுப்பிய மெசேஜை பார்த்திபன் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.அதிகம் வேலைகள் பாக்கி இருக்கிறது.. பர்சனல் மற்றும் professional.. அதனால் இந்த முறை உங்கள் ப்ரொஜெக்டை விடுகிறேன். உங்கள் கதையை கேட்க ஆர்வமாக இருந்தேன்."இவ்வாறு கூறி பார்த்திபனுக்கு வாழ்த்தும் கூறி இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!