தமிழ் திரையுலகின் கனவு திரைப்படமாக இருந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு ஜாம்பவான்கள் எடுக்க முயன்றும் கைகூடாமல் போன இந்த படத்தை பல ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர் வெற்றிகரமாக எடுத்துக் காட்டி உள்ளார் மணிரத்னம். அத்தோடு இப்படத்தை அவர் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக் குவித்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆன இப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.எனினும் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அத்தோடு இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதே ஆரம்பமாகி விட்டன. அதன்படி நேற்று இப்படத்தின் முதல் பாடலான அக நக என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது.
இவ்வாறுஇருக்கையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிசினஸ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வெளியிட தெலுங்கு வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அப்படத்தின் முதல் பாகம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை வாரிக்குவித்திருந்தாலும், இந்தி மற்றும் தெலுங்கில் சுத்தமாக வரவேற்பை பெறவில்லையாம்.
அத்தோடு சமீபத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தெலுங்கு வெர்ஷனை டிவியில் ஒளிபரப்பியபோதும் வெறும் 2.17 என்கிற மோசமான டிஆர்பி ரேட்டிங்கை தான் இப்படம் பெற்றிருந்ததாம். இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வாங்க தெலுங்கு வினியோகஸ்தர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. பெரிய அளவில் பொன்னியின் செல்வன் 2 படத்தை பிசினஸ் செய்துவிடலாம் என ஆவலோடு இருந்த படக்குழுவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Listen News!