• Sep 21 2024

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை- தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த தமன்னா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகிகளில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் ,அஜித், விஷால் ,சூர்யா ,கார்த்தி எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

இது தவிர தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர் தமிழ் திரைப்பட உலகில் வெள்ளை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.


இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா சினிமாவில் நாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் . சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை என்றும் பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாகக் கூட சினிமாக்காரர்கள் மதிக்க மாட்டார்கள் என்றும் கதாநாயகருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதி கூட கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு ஆரம்பத்தில் இருந்தே தொடர்கிறது என்று கூறிய தமன்னா, கதாநாயகிகள் புகைப்படம் போஸ்டர்களில் வருவதே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமன்னாவின் இந்த ஆதங்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement