• Sep 20 2024

நானே வருவேன் திரைப்படம் செல்வராகவன் எழுதிய கதையே இல்லையாம்-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என கிளாசிக் படங்களை இயக்கி தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் செல்வராகவன்.

அந்த வகையில் இவர் இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. இதனிடையே செல்வராகவன் அளித்துள்ள சமீபத்திய பெட்டியில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

அதன்படி தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணைந்து நல்ல படத்தை கொடுக்க நினைத்தோம், இதற்காக புதுப்பேட்டை 2 உள்ளிட்ட பல கதைகள் குறித்து பேசினோம், இந்த பேச்சு வார்த்தை 6 மாதங்கள் நடைபெற்றது.

எனினும் இதன் பின் தனுஷே ஒரு கதையுடன் வந்தார், அவர் கூறிய கதை என்னை கவர்ந்தது, சவாலாக இருந்தது. இது தனுஷின் கதை மற்றும் திரைக்கதை நான் இயக்கியுள்ளேன் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement