தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் என்னும் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் வாணி போஜன். இந்த சீரியலில் பிரபல்யமான இவர் இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால் பதிக்க ஆரம்பித்தார்.
அதன்படி அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‛ஓ மை கடவுளே' படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அந்த படத்தில் வாணி போஜனின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,‛கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!