• Sep 20 2024

மரண பயத்த காட்டிட்டாங்க.. கதிரை மிரட்டும் குணசேகரன்! மனசாட்சியே இல்லாத விசாலாட்சி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்றே பெரும் ரசிகர் வட்டாரமே காத்திருக்கும்.

இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, போலீசார் காட்டிய உடலை பார்த்து மொத்த குடும்பமும் கதறி அழுதுள்ளதோடு, கதிர் எடுத்த முடிவுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் குணசேகரன். 


அதாவது, ஒரு பக்கம் இறந்து கிடக்கும் உடலைப் பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் பதற்றமாக இருக்கும் கதிரை பார்த்து விசாலாட்சி இவன் என் பிள்ளையை கிடையாது நந்தினியோட புருஷன் என்று சொல்கிறார்.  

இதைக் கேட்டு கோவமடைந்த கதிர் எங்க வீட்டு பிள்ளையை நாங்க தேடி கண்டு பிடிக்கிறோம் என்று சொல்லி கிளம்ப, யார் பிள்ளையை யார் தேடுறது என ஷாக் கொடுக்கிறார் குணசேகரன்.



Advertisement

Advertisement