கொஞ்சம் குண்டான நடிகையை பார்த்து விட்டால் போதும், உடனடியாக அம்மா கேரக்டரில் நடிக்கிறீங்களான்னு கேட்கிறாங்க என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் அபர்ணா பாலமுரளி.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் அபர்ணா முரளி 2015ம் ஆண்டு வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இதனை அடுத்தே சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் பொம்மி காரெக்டரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சரியான வாய்ப்புக் கிடைக்காததால் இறுதியாக ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஒல்லியாக இருந்தால் தான் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார் அபர்ணா பாலமுரளி.அத்தோடு இண்டஸ்ட்ரியில் நேர்ந்த உருவ கேலி விஷயங்கள் பற்றி ஓப்பனாக பேசி உள்ளார். ஆரம்பத்தில் அதற்கு கவலைப் பட்டதாகவும், அதன் பிறகு அதை பொருட்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
கொஞ்சம் குண்டான நடிகையை பார்த்து விட்டால் போதும், உடனடியாக அம்மா கேரக்டரில் நடிக்கிறீங்களான்னு கேட்கிறாங்க என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் . விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அவர்கள் உருவத்தை வைத்து சாதிக்கவில்லை என்றும் நடிகர்களை போலவே நடிகைகளிடமும் திறமையை பார்த்தால் நல்லா இருக்கும் என பேசி உள்ளார்
மேலும் கடந்த செப்டம்பர் 11ம் தேதி , அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் போஸ்டரும் வெளியானது. அசோக் செல்வன், ரிது வர்மா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரா. கார்த்திக் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!