• Sep 20 2024

"குரங்கினுடைய கை இளநீருக்குள் மாட்டித் தவிப்பது போல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க"…வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் கலகலப்பான பேச்சு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'பைரவி' படம் இவரை சூப்பர் ஸ்டாராக அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என இவரை தேடி சென்றவர்கள் பலர். அன்று தொடங்கிய பட வாய்ப்புக்கள் இன்றுவரை இவரிற்கு குவிந்த வண்ணம் தான் இருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற நிலையையும் தாண்டி இன்று இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கின்றார்.

இவ்வாறாக இன்றுவரை படங்களில் ஓயாமல் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பல நிகழ்வுகளிலும், மேடைப்பேச்சுக்களிலும் கலந்து சிறப்பித்து வருகின்றார். இந்தநிலையில் சமீபத்தில் இவர் கலகலப்பாக சிரிச்சு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதில் அவர் நகைச்சுவையுடன் இணைந்த வகையில் மறைமுகமாக பல வாழ்க்கைத் தத்துவங்களைக் கூறியிருக்கின்றார்.

அதாவது தான் ஒரு சந்நியாசியை சந்தித்ததாகவும் கூறியிருக்கின்றார். மேலும் ரஜினிகாந்த் பேசுகையில் "அவரு சொன்னாரு போற போக்கிலே பார்த்திட்டு நாம எல்லோரும் நடிப்போம் என்று ஒரு வசனம் கூறி விட்டு மறுபடியும் என்னை காட்டிற்று இதோ இந்தப்பையன் பெரிய நடிகன் எண்டார். இது பாராட்டா ரிவீட்டா ஒண்ணுமே புரியல" எனக் காமெடியாக கூறியிருந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் "நான் எத்தனையோ படங்கள் பண்ணியிருந்தாலும் எனக்கு ஆத்மா திருப்தியைக் கொடுத்த படங்கள் 'ராகவேந்திரா', 'பாபா' இரண்டும் தான். அதில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்த மகான்களுக்கு எப்பிடி நன்றி கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. நானும் இருந்தேன் பிறந்தேன் வளர்ந்தேன் என்று தான் இருந்தேன். ராகவேந்திரா படம் வந்ததற்கு அப்புறமாய் தான் என்னை பல பேருக்குத் தெரியும். அதேபோன்று தான் பாபா படமும்" என அப்படக்குழுவினரைப் பாராட்டும் வகையில் கூறியிருந்தார்.

அத்தோடு "எனக்கு சந்தோசமான விஷயம் என்னவென்றால் என்னோட ரசிகர் 2பேர் இருந்தாங்க. லோகதாஸ் கிருஷ்ணா சந்நியாசி ஆகிட்டாங்க. நான் வந்து நடிகராகி இங்க இன்னும் நிற்கிறேன்" என சிரிச்சுக்கிட்டே அந்த மேடையில் நின்று பேசியிருக்கார் நம்ம சூப்பர் ஸ்டார்.

அத்தோடு அவர் மக்களுக்கு புரியும் வகையில் எளிய தத்துவத்தினையும் கூறியிருக்கின்றார். அதாவது "கங்கை நதி ஏன் புனிதம் என்றால் அங்கு முதலில் மூலிகைகள் பல சேர்ந்து இருந்தன. யோகிகள் பலரும் அங்கு குளிக்கச்ச சென்று அது புனிதம் எனக் கூறியிருந்தனர்" என சொன்னார். மேலும் அதில் அவர் இமயமலைக்கு தான் சென்று வந்த அனுபவம் பற்றியும் கூறியிருக்கின்றார்.

குறிப்பாக "இந்த உலகம், உடம்பு எல்லாமே அணுக்களால் தான் உண்டாகியிருக்கின்றன. அந்த அணுக்கள் தான் கோபம், அழுகை, சிரிப்பு என ஒவ்வொரு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி நிற்கும். பிரச்சினைகள், கஷ்டங்கள் ஒவ்வொருவருக்கும் வரும் தான். அவை வரும்போது கவலைப்படக் கூடாது, ஏனென்றால் அப்போது தான் உங்களுக்கு அவற்றை முகம்கொடுத்து எதிர்க்கக் கூடிய ஒரு சக்தி உங்களுக்கு தானாக உருவாகும்" என அறிவுரை கலந்த நகைச்சுவை கதையுடன் கூறியிருக்கின்றார்.

அதாவது "ஒரு துன்பம் அல்லது கஷ்டத்தை மனசில வைச்சுக்கிட்டு ஐயோ மறக்க முடியல மறக்க முடியல என்று சொல்லிச் சொல்லியே அதிலேயே ஊறிப்போயிடுறீங்க என்று கூறியுள்ளதோடு அதற்கு உதாரணமாக குரங்கு ஒன்று இளநீர் குடிக்கும் கதையையும் சுவாரசியமாக கூறியிருக்கின்றார். அதாவது குரங்கின் உடைய கை இளநீருக்குள் மாட்டிக்கிட்டு தவிப்பது போல பிரச்சினைக்குள் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க" எனக் கூறியிருக்கின்றார்.

நம்ம சூப்பர் ஸ்டார் இவ்வாறு சிரிச்சு சிரிச்சுப் பேசிய அந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதுமட்டுமன்றி அவரின் பேச்சைக்கேட்டு அந்த மேடையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ததும்ப சிரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement