• Sep 20 2024

“இவர்களால் தான் தங்களது திருமணம் நல்லபடியாக நடந்தது”..விக்கனேஷ்வரன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். அந்த வகையில் இவர்கள் கடந்த ஜூன் 9ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்களுடைய திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்தனர்.

இவர்களுடைய திருமணத்திற்கு அரசியல்வாதிகளும் திரை பிரபலங்களும் நண்பர்களும் மற்றும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே இவர்கள் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பின்னர் நயன்-விக்கி தம்பதியினர் நயன்தாராவின் அம்மா வீட்டிற்கு கேரளாவிற்கு சென்று அங்குள்ள கோயிலில் தரிசனத்தை பற்றி பெற்றோரிடமும் ஆசியும் பெற்று அங்கு ஓய்வெடுத்துவிட்டு தற்போது இருவரும் ஜாலியாக தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்தின் வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது அதனால் அங்கு திருமணம் புகைப்படங்களை தனிநபர் எடுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவ்வப்போது அதிகாரபூர்வ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் விக்கி.

அந்த வகையில் தற்போது திருமணத்தில் எடுத்த போட்டோ ஒன்றை பதிவிட்டு இவர்களால்தான் தங்களது திருமண நல்லபடியாக நடந்தது என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்களது திருமண ஏற்பாட்டாளர்கள் தங்கள் திருமணத்தை ஆண்டாண்டுக்கும் நினைவு கூறத்தக்க ஒன்றாக மாற்றியதற்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement